இம்மாநாட்டில் கோராக்பூர் இந்திய தொழில்நுட்ப மையத்தின் பேராசிரியரும், அம்பேத்காரின் பேரனுமான ஆனந்த் டெல்டும்டே துவக்கவுரையாற்றி பேசியதாவது: கல்வி, வேலைவாய்ப்பில் சமவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இடஒதுக்கீட்டு முறையயை அரசு கொண்டு வந்தது. விடுதலை போராட்டக் காலத்தில் இந்துக்களை எதிர்த்து உடன் கட்டை ஏறுதல் முறையை தடுக்கவே போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது, சாதி ஒழிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவில்லை. இந்திய அரசியல்மைப்பின் சிற்பி என் அம்பேத்காரை கூறினாலும், அதை தீயிட்டு கொளுத்துவதிலும் முதல் ஆளாக இருப்பேன் என்றார். இந்திய அரசியலமைப்பில் அந்த அளவுக்கு சாதி, மதமும் பின்னி பிணைந்திருக்கிறது.