/

விருதுநகர் அருகே குடும்பத் தகராறில் பெண்  தீக்குளித்து சாவு 

விருதுநகர் அருகே குடும்பத் தகராறு காரணமாக மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்த பெண் படுகாயம் அடைந்து உடல் கருகி சனிக்கிழமை உயிரிழந்தார்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:28 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே குடும்பத் தகராறு காரணமாக மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்த பெண் படுகாயம் அடைந்து உடல் கருகி சனிக்கிழமை உயிரிழந்தார்.

விருதுநகர் பாண்டியன் நகரில் உள்ள காந்தி நகரைச் சேர்ந்த சதீஷ்குமாரின் மனைவி பிரியா(25). இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆன நிலையில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இவர்கள் இருவரும் கூட்டுக் குடும்பமாக இருந்து வந்தனர். இதனால், தனிக்குடித்தனம் செல்வது தொடர்பாக இருவருக்கும் இடையே பிரச்னை இருந்து வந்துள்ளது.

இப்பிரச்னை முற்றியதை தொடர்ந்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் சமையலுக்கு வைத்திருந்த மண்ணெண்ணெய் உடலில் ஊற்றி பிரேமா தீக்குளித்து படுகாயம் அடைந்து உடல் கருகி உயிரிழந்தார். இது தொடர்பாக பாண்டியன் நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.