இது குறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரித்ததில் புல்வாய்க்கரையை சேர்ந்த டிரைவர் குறிஞ்சிநாதன்(46), ஆவாரம்பட்டியைச் சேர்ந்த சங்கர்(62) ஆகியோருக்கு தொடர்புள்ளதை அறிந்து விருதுநகர் சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து டி.எஸ்.பி மன்மதபாண்டியன் விசாரித்தார். அப்போது, இருவரும் நண்பர்கள் என்றும், அதில் காணாமல் போன பாலகிருஷ்ணன் மனைவி வசந்திக்கும், குறிஞ்சிநாதனுக்கும் தகாத உறவு இருந்ததால் பகை ஏற்பட்டுள்ளது. இதை மனதில் வைத்து கடந்த 29.4.2009ம் தேதி அன்று 10 மணிக்கு ஆவரங்குளத்திலிருந்து திருச்சுழிக்கு செல்கையில் பின்தொடர்ந்து சென்று இருவரும் பாலகிருஷ்ணனை கட்டையால் தாக்கி கொலை செய்துள்ளனர். பின்னர் சடலத்தையும், இருசக்கர வாகனத்தையும் வாகனத்தில்(டாடாஏஜ்) ஏற்றிக் கொண்டு அருகில் உள்ள கண்மாய் பகுதிக்குச் சென்று தீவைத்து எரித்துள்ளனர். அதேபோல், இருசக்கர வாகனத்தை கூத்தியார்குண்டு அருகே உள்ள கிணற்றில் வீசியதாகவும் 2 பேரும் வாக்குமூலம் அளித்தனர். எனவே அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இருவரையும் சிபிசிஐடி போலீஸார் கைது செய்து விருதுநகர் நீதிமன்றம் ஜே.எம்-2 நீதிபதி பாலகிருஷ்ணன் முன்னிலையில் ஆஜார்படுத்தியதை தொடர்ந்து காவலில் வைக்க உத்தரவிட்டார்.