அதேபோல், தானியங்களில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிப்பது தொடர்பாகவும் சிறுதானிய மகளிர் குழுக்கள் தொடங்கி பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் வரகு, பணிவரகு, கேழ்வரகு மற்றும் தினை ஆகிய தானியங்களை பிரித்தெடுத்து மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிப்பது என்பதும், சந்தைப்படுத்தும் முறை குறித்தும் விளக்கமாக எடுத்துரைக்கப்படுகிறது. அவ்வகையில் இம்மாவட்டத்தில் 11 ஊராட்சி ஒன்றியங்களிலும் தொடங்கப்பட்டுள்ள சிறுதானிய மகளிர் குழுக்களுக்கு தலா 1 நவீன இயந்திரமும், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்கு மட்டும் 2 நவீன இயந்திரமும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.