தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

விருதுநகரில் இளம்பெண் குழந்தையுடன் மாயம்: தந்தை புகார்

விருதுநகர் அருகே இளம்பெண் குழந்தையுடன் மாயமான சம்பவம் தொடர்பாக அப்பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் புதன்கிழமை புகார் செய்தார்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:01 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே இளம்பெண் குழந்தையுடன் மாயமான சம்பவம் தொடர்பாக அப்பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் புதன்கிழமை புகார் செய்தார்.

விருதுநகர் அருகே கருப்பசாமி நகரைச் சேர்ந்த கனகராஜின் மகள் கனகவள்ளி(27). இவரது மகளுக்கும் முத்துக்கிருஷ்ணன் என்பவருக்கும் திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்குள் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக கனகவள்ளி தனது குழந்தையுடன் கருப்பசாமி நகரில் உள்ள தந்தையார் வீட்டில் குடியிருந்து வருகிறார். இதையடுத்து புதன்கிழமை மாலையில் வெளியே சென்று வருவதாக தனது குழந்தையுடன் சென்றவர் நீண்டநேரமாகியும் வீடு திரும்பவில்லையாம்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் உறவினர் வீடுகளில் தேடி பார்த்தும்  எங்கிருக்கிறார் என்கிற தகவல் கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து அப்பெண்ணின் தந்தை கனகராஜ் பாணடியன் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து குழந்தையுடன் மாயமான பெண் குறித்து விசாரித்து வருகின்றனர்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.