தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

விருதுநகரில் நடந்து சென்ற மூதாட்டியிடம் 3 சவரன் நகை பறிப்பு

விருதுநகரில் நடந்து சென்ற மூதாட்டியை வழிமறித்து கீழே தள்ளி 3 சவரன் நகையை பறித்துச் சென்ற மர்ம நபர் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:01 am

எஸ். பாண்டியன்

விருதுநகரில் நடந்து சென்ற மூதாட்டியை வழிமறித்து கீழே தள்ளி 3 சவரன் நகையை பறித்துச் சென்ற மர்ம நபர் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர் ஆண்டிகிணற்றுத் தெருவைச் சேர்ந்தவர் ஜீவானந்தம் என்பவரின் மனைவி கமலாதேவி(60). இவர் புதன்கிழமை காலையில் மாரியம்மன் கோயிலுக்கு வழிபாடு செய்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது, பெரிய கருப்பன் தெருவைக் கடந்து போகும் போது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத 25 வயதுடைய மர்ம நபர் ஒருவர் திடீரென மூதாட்டியை தள்ளிவிட்டுள்ளார். பின்னர் சுதாரித்து எழுவதற்குள் கழுத்தில் கிடந்த 3 சவரன் நகையை பறித்துக் கொண்டு வாகனத்தில் தப்பியோடினாராம்.

இது தொடர்பாக விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் கமலாதேவி புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து மூதாட்டியை கீழே தள்ளி நகையை பறித்துச் சென்ற மர்ம நபர் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.