எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

அடையாளம் தெரியாத நபர்களால் விவசாயி வெட்டிக் கொலை

தூத்துக்குடி மாவட்டம், வைகுண்டம் வட்டத்துக்குள்பட்ட கொங்கராயக்குறிச்சி என்ற கிராமத்தில் வயல் வெளி

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:55 am

தி. இன்பராஜ்

தூத்துக்குடி மாவட்டம், வைகுண்டம் வட்டத்துக்குள்பட்ட கொங்கராயக்குறிச்சி என்ற கிராமத்தில் வயல் வெளி பகுதியில் அதே பகுதியைச் சேர்ந்த விவசாயி பிச்சையா (62) அடையாளம் தெரியாத நபர்களால் திங்கள்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இந்தக் கொலை சம்பவம் பற்றிய தகவல் பரவியதும் பிச்சையாவின் ஆதரவாளர்கள் ஏராளமானோர் கொங்கராயக்குறிச்சியில் உள்ள காமராஜர் சிலையை சேதப்படுத்தினர். மேலும், அதே பகுதியில் இருந்த ஹோட்டல், வீடுகளும் சேதப்படுத்தப்பட்டன.

மோட்டார் சைக்கிள் ஒன்று தீவைத்து எரிக்கப்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மா. துரை தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.