ஸ்ரீவைகுண்டம் புதிய தமிழகம் நகர செயலர் பாஸ்கரன் கடந்த பிப். 22ம்தேதி கொலை செய்யப்பட்டார். இதை தொடர்ந்து அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூற அக்கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஸ்ரீவைகுண்டம் வர திட்டமிட்டார். ஆனால், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ரவிக்குமார், ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் மார்ச் 9ம் தேதி வரைய 144 தடை உத்தரவு பிறபித்தார். இதையொட்டி ஸ்ரீவைகுண்டத்திற்கு கிருஷ்ணசாமி வந்து செல்ல போலீஸார் தடை விதித்தனர். இடைதொடர்ந்து, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 2ம் தேதி) ஸ்ரீவைகுண்டம் வந்து செல்ல கிருஷ்ணசாமி அனுமதி பெற்றார். இதையொட்டி ஸ்ரீவைகுண்டத்தில் எஸ்பிக்கள் நெல்லை நரேந்திரன்நாயர் தூத்துக்குடி துரை, திண்டுக்கல் எஸ்.பி. ஆகியோர் தலைமையில் ஏடிஎஸ்பிக்கள் கந்தசாமி, இளங்கோ, ஏஎஸ்பி அருண்சக்திகுமார், சீனிவாசன், டிஎஸ்பிக்கள் ஸ்ரீவைகுண்டம் விஜயகுமார், சசிமோகன் மற்றும் 19 ஆய்வாளர்கள், 63 உதவி -ஆய்வாளர்கள், அதிரடிபடை போலீஸார் 60 பேர், சிறப்பு போலீஸ் படையினர் 122 பேர் மற்றும் உள்ளூர் போலீஸார் 295 பேர் உட்பட சுமார் 600 பேர் குவிக்கப்பட்டு இருந்தனர்.