டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

விருதுநகர் மாவட்டத்தில் சி.ஐ.டி.யு சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம்: 286 பெண்கள் உள்பட 966 பேர் கைது

விவசாயிகளின் விளைநிலங்களைச் கையகப்படுத்தும் சட்டமசோதாவை நிறைவேற்றக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகர் மாவட்டத்தில் 18 இடங்களில்

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:43 am

எஸ். பாண்டியன்

விவசாயிகளின் விளைநிலங்களைச் கையகப்படுத்தும் சட்டமசோதாவை நிறைவேற்றக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகர் மாவட்டத்தில் 18 இடங்களில் செவ்வாய்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சி.ஐ.டி.யு தொழிற் சங்கத்தினர் 286 பெண்கள் உள்பட 966 பேரை போலீஸார் கைது செய்தனர்.

விருதுநகரில் பழைய பேருந்து நிலையம் முன்பு நடந்த மறியல் போராட்டத்திற்கு வட்டார வேலுச்சாமி தலைமை வகித்தார். இதில், விவசாயிகளின் விளைநிலங்களை கையகப்படுத்தும் சட்டமசோதாவை நிறைவேற்றக் கூடாது. தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக மாதம் தோறும் ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மேற்கு காவல் நிலைய போலீஸார் 99 பேரை கைது செய்தனர்.

சூலக்கரையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வளாகம் முன்பு நடந்த போராட்டத்தில் மாவட்ட செயலாளர் பாரதி தலைமையில் 33 பேரும், வச்சக்காரப்பட்டி வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு கன்வீனர் ஆரோக்கியராஜ் தலைமையில் 47 பேரும், சிவகாசி அருகே அனுப்பங்குளத்தில் ஒன்றிய செயலாளர் முத்துராஜ் தலைமையில் 96 பேரும், அதே ஊரில் பேருந்து நிலையம் முன்பு 26 பேரும், திருத்தங்கல் அண்ணா சிலை முன்பு துணை செயலாளர் பாண்டி தலைமையில் 23 பேரும்,

அருப்புக்கோட்டையில் பாலையம்பட்டி முத்தரையர் சிலை முன்பு மாவட்ட குழு உறுப்பினர் கணேசன் தலைமையில் 27 பேரும், அதே ஊரில் அண்ணாசிலை அருகே 29 பேரும், காரியாபட்டி பேருந்து நிலையம் முன்பு வட்டார கன்வீனர் பரமசிவம் தலைமையில் 87 பேரும், ராஜபாளையம் தொழிலாளர் நலத்துறை அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் சுவாமிநாதன் தலைமையில் 32 பேரும், கீழகுலராஜராமன் அஞ்சல் அலுவலகம் முன்பு ஒன்றிய செயலாளர் முனியாண்டி தலைமையில் 89 பேரும், தளவாய்புரம் செட்டியபட்டி பேருந்து நிறுத்தம் அருகே மாவட்ட துணைத் தலைவர் தேவா தலைமையில் 87 பேரும், சாத்தூரில் அஞ்சல் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார செயலாளர் ராஜ்குமார் தலைமையில் 52 பேரும், ஆலங்குளம் சிமெண்ட் தொழிற்சாலை சந்திப்பு சாலையில் ஒன்றியச் செயலாளர் கண்ணன் தலைமையில் 23பேரும், ஏழாயிரம்பண்ணை மாரியம்மன் கோயில் முன்பு மாவட்ட குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியம் தலைமையில் 68 பேரும்,

வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மாவட்ட குழு உறுப்பினர் தலைமையில் 25 பேரும், ஸ்ரீவில்லிபுத்தூரில் நிர்வாகி சாராள் தலைமையில் 60 பேரும், கிருஷ்ணன்கோவில் சந்திப்பு சாலையில் கன்வீனர் சசிக்குமார் தலைமையில் 20 பேரும், நரிக்குடி பேருந்து நிலையம் முன்பு மாவட்ட குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியம் தலைமையில் 33 பேரும் என மொத்தம் 286 பெண்கள் உள்பட 966 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.