விருதுநகரில் ஆயுதங்களுடன் காரில் வந்த 3 பேர் கைது
விருதுநகரில் பயங்கர ஆயுதங்களுடன் பழைய காரில் வந்த 3 இளைஞர்களை போலீஸார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.


விருதுநகரில் பயங்கர ஆயுதங்களுடன் பழைய காரில் வந்த 3 இளைஞர்களை போலீஸார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.
விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் ரயில்வே கேட் பகுதியில் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் தெய்வீகபாண்டியன் தலைமையில் சனிக்கிழமை அதிகாலையில் போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக பதிவு எண் இல்லாத பழைய கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது, போலீஸார் நிற்பதை பார்த்ததும் குறுக்குச் சாலையில் வேகமாக செல்வதற்காக காரை திருப்பியுள்ளனர்.
உடனே சுற்றி வளைத்து நிறுத்தி வாகனத்திற்குள் போலீஸார் சோதனை செய்தனர். காருக்குள் அரிவாள், பட்டாக்கத்தி, கைப்பிடி கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்ததும் தெரியவந்தது. மேலும், அவர்களிடம் விசாரித்ததில் விருதுநகர் பாண்டியன் நகரைச் சேர்ந்த திவாகர்(21), மணிவண்ணன்(18), காசிசெல்வம்(23) என்பதும் கூலி வேலை செய்து வருவதும் தெரியவந்தது.
மேலும், விசாரணை செய்த போது முன்னுக்கு பின் முரனான தகவலையும் தெரிவித்துள்ளனர். இதனால் கிழக்கு காவல் நிலைய போலீஸார் சந்தேகம் அடைந்த நிலையில் 3 பேரையும் கைது செய்தனர். அதைத் தொடர்ந்து பயங்கர ஆயுதங்களுடன் அதிகாலையில் பதிவு எண் இல்லாத காரில் சென்றது தொடர்பாக இளைஞர்களிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...