திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

திருச்சுழி அருகே மது வாங்கி வரச் சொன்னவருக்கு அரிவாள் வெட்டு: ஒருவர் கைது

திருச்சுழி அருகே மது வாங்கி வர சொன்னவரை அரிவாளால் வெட்டியவரை எம்.ரெட்டியபட்டி போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:56 am

எஸ். பாண்டியன்

திருச்சுழி அருகே மது வாங்கி வர சொன்னவரை அரிவாளால் வெட்டியவரை எம்.ரெட்டியபட்டி போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

திருச்சுழி அருகே ஏரசின்னம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராசையா(40).  சிலுக்கப்பட்டியைச் சேர்ந்தவர் துப்புரவு பணியாளராக இருக்கும் ராமர்(40) ஆகிய இருவரும் நண்பர்கள் ஆவார்கள். இந்நிலையில், புதன்கிழமை காலையில் மது குடிப்பதற்கு ராமர் பணம் கேட்டாராம். அதற்கு, ராசையா தனக்கும் மது வாங்கி வரும் படி கூறி ரூ.1000 கொடுத்து அனுப்பி வைத்தாராம். நீண்டநேரமாகியும் அவர்  வராத காரணத்தால் மதுக்கடைக்கே நேரடியாக சென்றாராம. அப்போது, ராமர் அதிகமாக மது குடித்த நிலையில் நின்றிருந்தவரிடம், எனக்கு ஏன் மது வாங்கி வரவில்லையென கேட்டும், மீதம் பணமும் கேட்டாராம. அதற்கு பணம் எதுவும் வாங்கவில்லையென மறுத்ததோடு அவர் வைத்திருந்த அரிவாளால் ராசையாவை வெட்டியதில் காயம் அடைந்தாராம்.

இது தொடர்பாக அவர் எம்.ரெட்டியாபட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் துப்புரவு பணியாளர் ராமரை போலீஸார் கைது செய்து அரிவாள் வெட்டு சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.