2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

மதமாற்றத்திற்கு எதிரான சட்டம் கொண்டு வரவேண்டும்: பிரவீன் தொகாடியா

ஆர்.ஆர்.எஸ். இயக்கத்தின் 50-வது ஆண்டு பொன்விழா பொதுக்கூட்டம் திருவனந்தபுரத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற இருக்கிறது. அதில், பங்கேற்பதற்காக வந்த அவர் சாத்தூரில் உள்ள ஆர்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:33 am

எஸ். பாண்டியன்

மதமாற்றத்திற்கு எதிரான சட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சர்வதேச ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் தலைவர் பிரவீன் தொகாடியா தெரிவித்தார்.

ஆர்.ஆர்.எஸ். இயக்கத்தின் 50-வது ஆண்டு பொன்விழா பொதுக்கூட்டம் திருவனந்தபுரத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற இருக்கிறது. அதில், பங்கேற்பதற்காக வந்த அவர் சாத்தூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தென்மண்டல ஒருங்கிணைப்புச் செயலாளர் ராமகிருஷ்ணனின் இல்லத்திற்கு வந்தார்.

அப்போது, இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பிரவீன் தொகாடியா கூறுகையில், அரசியலமைப்புச் சட்டங்கள் மதமாற்றத்தை அனுமதிப்பது இல்லை. அதோடு, மதமாற்றம் ஜனநாயகத்திற்கு எதிரானது ஆகும். அதனால் இந்து மற்றும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தினர் மதமாற்றத்தை எதிர்க்கிறோம். வேணுகோபால் குழுவினரும் தமிழகத்தில் வலுக்கட்டயமாக மதமாற்றம் நடந்து வருவதாகவும் அறிக்கை அளித்துள்ளனர். இதுபோன்ற மதமாற்றத்தை அனுமதிக்க கூடாது என்பதற்காக மத்திய பிரதேசம், இமாச்சல் பிரதேசம், ஒரிசா போன்ற மாநிலங்களில் மதமாற்றத்திற்கு எதிரான சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதேபோல், மற்ற மாநிலங்களிலும் கொண்டு வர வேண்டும்.

இந்து மதத்தினர் வணிகம், வர்த்தகம், விவசாயம் போன்றவைகளில் முன்னோடியாகவும், பொருளாதார பாதுகாப்புடனும் இருந்தனர். தற்போது, இவை எல்லாவற்றையும் இழந்துள்ளனர். இவைகளை மீட்டெடுப்பதுதான் இம்மாநாட்டின் நோக்கமாகும். இதுபோன்றவர்களை வழிநடத்துவதற்கும் என்னிடம் திட்டம் உள்ளது. அதேபோல், அயோத்தியில் ராமர் கோயில் அமைப்பது தொடர்பாக செய்தியாளர்கள் கேட்டதற்கு ராமர்கோயில் கட்டுவோம், எப்போது தொடங்குவோம் என்பதும் அனைவருக்கும் தெரியவரும் என்று மட்டும் அவர் தெரிவித்தார். அப்போது, உடன் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் ஆகியோர் இருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.