2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை மேற்பார்வையாளர் மீது பெண் தொழிலாளி புகார்

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் தனியாக பணியில் ஈடுபட்டிருந்த போது ஆபாசமாக பேசியதோடு தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சி செய்ததாக ஆலையின் மேற்பார்வையாளர் மீது

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:32 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் தனியாக பணியில் ஈடுபட்டிருந்த போது ஆபாசமாக பேசியதோடு தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சி செய்ததாக ஆலையின் மேற்பார்வையாளர் மீது பெண் தொழிலாளி புகார் செய்தார்.

விருதுநகர் அருகே வெள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த கணேசனின் மனைவி பார்வதி(32). இவர் ஆமத்தூர் அருகே கட்டனார்பட்டியில் இயங்கி வரும் தனியார் பட்டாசு ஆலையில் வேலை செய்து வருகிறார். சிவகாசி அருகே சாட்சியாபுரம் காலனியைச் சேர்ந்தவர் சாமுவேல்ராஜ் என்பவரின் மகன் திரவியம்(31). இவரும் இதே ஆலையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகின்றாராம்.

இந்நிலையில் வழக்கம் போல் அந்த ஆலையில் உள்ள ஒர் அறையில் பார்வதி மட்டும் தனியாக புதன்கிழமை வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாராம். அப்போது, அங்கு வந்த மேற்பார்வையாளர் திரவியம், பார்வதியிடம் ஆபாசமாக பேசியதோடு, தவறாக நடக்கவும் முயற்சித்துள்ளார். இதையடுத்து, உடனே அங்கிருந்து தப்பி தொழிலாளர்கள் நடமாடும் பகுதிக்கு வந்தாராம். பின்னர் இது தொடர்பாக வச்சக்காரப்பட்டி காவல் நிலையத்தில் பார்வதி புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் பட்டாசு ஆலை மேற்பார்வையாளர் திரவியம் மீது வழக்கு பதிந்து நடந்த சம்பவம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.