2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

விருதுநகரில் பருப்பு வியாபாரியிடம் ரூ.35.28 லட்சம் மோசடி: 5 பேர் மீது வழக்கு பதிவு

விருதுநகரில் பருப்பு வியாபாரியிடம் பொருள்களை அனுப்பாமல் ரூ.35.28 லட்சத்தை மோசடி செய்த முகவர்கள் 5 பேர் மீது பஜார் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:31 am

எஸ். பாண்டியன்

விருதுநகரில் பருப்பு வியாபாரியிடம் பொருள்களை அனுப்பாமல் ரூ.35.28 லட்சத்தை மோசடி செய்த முகவர்கள் 5 பேர் மீது பஜார் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

விருதுநகர் பஜார் பகுதியைச் சேர்ந்த விவேகானந்தனின் மகன் குறள்ராஜன்(35). இவர் இப்பகுதியில் பருப்பு, கொத்தமல்லி ஆகியவைகளை அரைக்கும் மில் வைத்து  வியாபாரம் செய்து வருகிறார். இதே ஊரில் சேக்கிழார் தெருவைச் சேர்ந்தவர் கனகவேல், பஜார் பகுதியைச் சேர்ந்த ரமேஷ், விக்னேஷ்ராம், குருபிரசாத், அனுமான் நகரைச் சேர்ந்த பவுனராஜ் ஆகியோர் கொத்தமல்லி, பருப்பு ஆகியவைகளை வெளிநாடுகளில் கப்பல் மூலம் தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதி செய்து வியாபாரிகளுக்கு அனுப்பி வைக்கும் முகவர் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 30.6.204 முதல் 12.8.2014 வரையிலான காலகட்டங்களில் குறிப்பிட்ட பொருள்களை வியாபாரத்திற்கு அனுப்பி வைப்பதாக கூறி வியாபாரி குறள்ராஜனிடம் ரூ.35.28 லட்சம் பணம் பெற்றுள்ளனர்.  அதோடு, குறிப்பிட்ட நேரத்தில்  பருப்பு, கொத்தமல்லி ஆகிய பொருள்களை இறக்குமதி செய்து தராமல் 5 பேரும் காலதாமதம் செய்து வந்தார்களாம். பின்னர் பணத்தை கேட்டதற்கும், பொருள்கள் தருவதாக கூறி திருப்பித் தரவும் மறுத்தார்களாம். இந்நிலையில்,  இவர்களால் தன்னுடைய பணம் மோசடி செய்யப்படுவதை அறிந்து ஏமாற்றம் அடைவதை அறிந்து கொண்டார்.

இது தொடர்பாக குறள்ராஜன் புதன்கிழமை விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரனிடம் புகார் செய்தார். அதேபோல், உடனடியாக சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்யவும் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் பஜார் காவல் நிலைய போலீஸார் வியாபாரிடம் பணத்தை மோசடி செய்ததாக கூறி முகவர்கள் 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து தீவிரமாக  விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.