வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

விருதுநகர் அருகே மதுக்கடை தொழிலாளியை தாக்கியவர் கைது

விருதுநகர் அருகே உள்ள எரிச்சநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமர்(40). இவர் ஆமத்தூரில் மதுபானக்கடை பாரில் தொழிலாளியாக இருந்து வருகிறார். இந்நிலையில் வெள்ளூர் கிழக்குத்தெருவைச்

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:27 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே மதுக்கடை பார் தொழிலாளியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை ஆமத்தூர் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

விருதுநகர் அருகே உள்ள எரிச்சநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமர்(40). இவர் ஆமத்தூரில் மதுபானக்கடை பாரில் தொழிலாளியாக இருந்து வருகிறார். இந்நிலையில் வெள்ளூர் கிழக்குத்தெருவைச் சேர்ந்த தர்மர்(36), மாரிச்சாமி ஆகியோர் சில்லரையாக மதுபாட்டில்களை வாங்கி கிராமத்திற்குள் விற்பார்களாம். இது தொடர்பாக ஆமத்தூர் போலீஸாரிடம் மதுப்பானக்கடை பார் தொழிலாளி ராமர் தெரிவித்திருக்க கூடும். அதனால், ஞாயிற்றுக்கிழமை மாலையில் மதுக்கடை பாருக்கு வந்த தர்மர், அங்கிருந்த தொழிலாளி ராமரை தகாத வார்த்தைகள் பேசியும் கையாலும், செருப்பாலும் தாக்கினாராம். அதோடு, இருவரும் பாரில் இருந்த நாற்காலிகள் மற்றும் தடுப்புகளையும் நொறுக்கியதோடு, எங்கள் விசயத்தில் தலையிட்டால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினார்களாம்.

இது தொடர்பாக ஆமத்தூர் காவல் நிலையத்தில் ராமர் புகார் செய்தார். அதன் அடிப்படையில் வெள்ளூரைச் சேர்ந்த மாரிச்சாமி மீது வழக்கு பதிவு செய்தும், அதே கிராமத்தைச் சேர்ந்த தர்மரை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.