தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

விருதுநகரில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிப்பது தொடர்பாக தலைமையாசிரியர்களுக்கான கூட்டம்

விருதுநகர் கேவிஎஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த கலந்தாய்வுக் கூட்டத்திற்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர்

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:25 am

எஸ். பாண்டியன்

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்2 தேர்வில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பது தொடர்பாக அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் செவ்வாய்கிழமை நடைபெற்றது.

விருதுநகர் கேவிஎஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த கலந்தாய்வுக் கூட்டத்திற்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பேசுகையில், 10ம் வகுப்பு, பிளஸ்2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும். அதற்கான நடவடிக்கைகளில் தலைமையாசிரியர்கள் ஈடுபட வேண்டும். அதோடு, தேர்ச்சி சதவீதம் குறைந்த மாணவ, மாணவிகளுக்கு எளிதாக பாடங்களை புரிந்து கொள்ள வேண்டும். இதற்காக நவீன முறையில் பாடவாரியாக குறுந்தகடுகள் பள்ளிக் கல்வித்துறையால்  தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த குறுந்தகடுகளை தலைமையாசிரியர்கள் பெற்று, அந்தந்த பாட ஆசிரியர்களிடம் வழங்கி தொலைக்காட்சி உதவியுடன் டிவிடி மூலம் கற்பிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். தற்போது, இம்மாவட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வகுப்பறைகள் அனைத்தும் சுத்தமாக வைக்கவும், சுற்றுச் சூழல் சுகாதார வளாகங்கள் கழிவு நீர் வாய்க்கால் ஆகியவைகளில் தண்ணீர் தேங்காமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும், டெங்கு தொடர்பாக மாணவ, மாணவிகளை ஒருங்கிணைத்து கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணியும் நடத்த வேண்டும் என்பது குறித்து கூட்டத்தில் விளக்கமாக அவர் எடுத்துரைத்தார்.

இக்கூட்டத்தில் கலந்து கொண்ட தலைமையாசிரியர்கள் அனைவருக்கும் பாடவாரியாக குறுந்தகடுகளும் வழங்கப்பட்டது. இதில், மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து அரசு உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட முதன்மைக் கல்வி துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.