கடன் வாங்கிய பிரச்னையில் மனைவி உள்பட 3 பேர் மாயம் கணவர் புகார்
விருதுநகர் பாண்டியன் நகரை சேர்ந்தவர் தேவராஜ் நிக்சன்(42). இவரது மனைவி மாரியம்மாள்(32). இந்நிலையில் மாரியம்மாள் மகளிர் சுய உதவிக்குழுவின் மூலம் திங்கள்கிழமை ரூ.80 ஆயிரம் கடன்


விருதுநகரில் கடன் வாங்கிய பிரச்னை தொடர்பாக மனைவி மற்றும் குழந்தைகளுடன் மாயமானதாக பாணடியன் நகர் காவல் நிலையத்தில் கணவர் புகார் செய்தார்.
விருதுநகர் பாண்டியன் நகரை சேர்ந்தவர் தேவராஜ் நிக்சன்(42). இவரது மனைவி மாரியம்மாள்(32). இந்நிலையில் மாரியம்மாள் மகளிர் சுய உதவிக்குழுவின் மூலம் திங்கள்கிழமை ரூ.80 ஆயிரம் கடன் பெற்றாராம். இவ்வளவு கடன் ஏன் வாங்கினாய் எனக் கூறி மனைவியிடம் தேவராஜ் நிக்சன் தகராறு செய்தாராம். இதனால் ஆத்திரம் அடைந்த மாரியம்மாள், தனது மகள்களான பிரின்சி(11), காவ்யா(10) ஆகியோரை அழைத்துக் கொண்டு தனது கணவரிடம் குறிப்பிடாமல் வீட்டை விட்டு வெளியேறிச் சென்றாராம்.
இதையடுத்து மனைவி குழந்தைகளை காணாமல் அதிர்ச்சி அடைந்த தேவராஜ் நிக்சன் தாயார், மாமியார் மற்றும் உறவினர்களிடம் விசாரித்ததில் எங்கிருக்கிறார் என்கிற தகவல் தெரியவில்லை. இது தொடர்பாக விருதுநகர் பாண்டியன் நகர் காவல் நிலையத்தில் தேவராஜ் நிக்சன் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து குழந்தைகளுடன் காணாமல் போன மாரியம்மாள் குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...