அதன் அடிப்படையில் விருதுநகர் மாவட்டத்தில் இயங்கி வரும் மருந்தகங்களில் மருந்து கட்டுப்பாட்டு அலுவலர் தலைமையில் 10 குழுக்கள் அமைத்து ராஜபாளையம், விருதுநகர், காரியாபட்டி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட ஒவ்வொரு பகுதியிலும் செயல்பட்டு வரும் மருந்தகங்களில் தீவிரமாக சோதனை மேற்கொண்டனர். அதில், டாக்டர்களின் பரிந்துரைச்சீட்டின்றி மருந்து மாத்திரைகளை வழங்கியது தெரியவந்தது. அதன் அடிப்படையில் விருதுநகர் மேற்கு காவல் நிலையத்திற்கு உள்பட்ட கத்தாளம்பட்டியைச் சேர்ந்த பொன்ராஜ்(53), பர்மாகாலனியைச் சேர்ந்த சாகுல்ஹமீது(40) மற்றும் இப்ராஹீம் பாரூக்(35) ஆகியோரும்,