தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

விருதுநகரில் மருத்துவர்களின் பரிந்துரைச் சீட்டின்றி மருந்து விநியோகம்: 8 பேர் கைது

விருதுநகர் மாவட்டத்தில், மருந்தகங்களில் டாக்டர்களின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் மருந்து மாத்திரை வழங்குகிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருந்து கட்டுப்பாட்டு துறை அலுவலர்களுக்கு

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:08 am

எஸ். பாண்டியன்

விருதுநகரில் மருத்துவர்களின் பரிந்துரைச் சீட்டு எதுவும் இல்லாமல் மருந்து, மாத்திரைகளை விநியோகம் செய்ததாக கடைக்காரர்கள் 8 பேரை சனிக்கிழமை இரவு போலீஸார் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டத்தில், மருந்தகங்களில் டாக்டர்களின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் மருந்து மாத்திரை வழங்குகிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருந்து கட்டுப்பாட்டு துறை அலுவலர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உத்தரவிட்டிருந்தார்.

அதன் அடிப்படையில் விருதுநகர் மாவட்டத்தில் இயங்கி வரும் மருந்தகங்களில் மருந்து கட்டுப்பாட்டு அலுவலர் தலைமையில் 10 குழுக்கள் அமைத்து ராஜபாளையம், விருதுநகர், காரியாபட்டி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட ஒவ்வொரு பகுதியிலும் செயல்பட்டு வரும் மருந்தகங்களில் தீவிரமாக சோதனை மேற்கொண்டனர். அதில், டாக்டர்களின் பரிந்துரைச்சீட்டின்றி மருந்து மாத்திரைகளை வழங்கியது தெரியவந்தது. அதன் அடிப்படையில் விருதுநகர் மேற்கு காவல் நிலையத்திற்கு உள்பட்ட கத்தாளம்பட்டியைச் சேர்ந்த பொன்ராஜ்(53), பர்மாகாலனியைச் சேர்ந்த சாகுல்ஹமீது(40) மற்றும் இப்ராஹீம் பாரூக்(35) ஆகியோரும்,

ஆமத்தூர் காவல் நிலையத்திற்குள்பட்ட செங்கோட்டை சரவணன்(23), மத்தியசேனையைச் சேர்ந்த இளையராஜா(35), சிவரக்கோட்டை பால்பரந்தாமன்(45), வத்தக்காரப்பட்டி காவல் நிலையத்திற்குள்பட்ட பகுதிகளில் மருந்து மாத்திரைகளை வீடுகளில் வைத்து விற்பனை செய்ததாக ஆவுடையாபுரம் நடராஜன்(70), ஆர்.ஆர்.நகரைச் சேர்ந்த சூபிரியல்கான்(44) ஆகிய 8 பேரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.