தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

விருதுநகரில் பகுதியில் மருந்தகங்களை கண்காணிக்க 10 குழுக்கள் அமைப்பு: மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

விருதுநகர் மாவட்டத்தில் மருந்தகங்களை தொடர்ந்து  கண்காணிக்க மருந்து கட்டுப்பாட்டு அலுவலர் தலைமையில் 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:23 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்டத்தில் மருந்தகங்களை தொடர்ந்து  கண்காணிக்க மருந்து கட்டுப்பாட்டு அலுவலர் தலைமையில் 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்:

விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டை ஆகிய பகுதிகளில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில் மருத்துவர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  தற்போது நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும், இக்குறிப்பிட்ட பகுதிகளில் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் காய்ச்சல் போன்ற நோய்களுக்கு மருந்து மாத்திரைகள் தன்னிச்சையாக வழங்கப்படுவதாக புகார் வந்துள்ளன. அவ்வாறு வழங்கும் மருந்தகங்களை ஆய்வு செய்ய மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் சென்னை மருந்து கட்டுப்பாட்டு துறை அலுவலர்   தலைமையில் 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில், ஒவ்வொரு குழுவிலும்  உதவி மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர் மற்றும் 3 அலுவலர்கள் என ஆய்வில் ஈடுபடுவார்கள். இவர்கள் ஒவ்வொரு மருந்துக் கடைகளிலும் மருத்துவரின் பரிந்துரை சீட்டுக்குத்தான மருந்து மாத்திரைகள் வழங்குகிறார்களா அல்லது தன்னிச்சையாக வழங்குகிறார்களா என்பதை பதிவேடுகளை பார்த்து ஆய்வு செய்வார்கள். அதன் பேரில் மருந்தகங்கள் தவறு செய்தது தெரியவந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.