தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

சிமெண்ட் விலை உயர்வை கட்டுப்படுத்த தீர்வு குழுக்கள் அமைக்க வேண்டும்: பொறியாளர் சங்கம் கோரிக்கை

தமிழகத்தில் கட்டுமான பொருள்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதனால் கட்டுமான தொழில் சரிவடையும் நிலையிருக்கிறது. ஒரே மாதத்திற்குள் சிமெண்ட் மூடை விலை ரூ.330 லிருந்து ரூ.

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:22 am

எஸ். பாண்டியன்

சிமெண்ட் விலை உயர்வை கட்டுப்படுத்த தீர்வு குழுக்கள் அமைக்க வேண்டும் என பொறியாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக தமிழக அனைத்து கட்டுமான பொறியாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் காந்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் கட்டுமான பொருள்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதனால் கட்டுமான தொழில் சரிவடையும் நிலையிருக்கிறது. ஒரே மாதத்திற்குள் சிமெண்ட் மூடை விலை ரூ.330 லிருந்து ரூ.380 ஆக உயர்ந்துள்ளது. இதனால் நடுத்தர, ஏழை எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். விலை உயர்வை கட்டுப்படுத்த அரசின் கட்டுப்பாட்டு வாரியங்கள் தவறிவிட்டன. அதனால் உடனே சரி செய்வதற்கு தீர்வுக்குழுக்கள் அமைக்க வேண்டும். இதில், கட்டுமான பொறியாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் இடம் பெற வேண்டும். அம்மா திட்டத்தில் 2 லட்சம் மெட்ரிக் டன் மட்டுமே கொள்முதல் செய்யப்பட இருக்கிறது. மாநில அளவில் மாதத்தின் தேவை 68 லட்சம் மெட்ரிக் டன்னில், 34 லட்சம் மெட்ரிக் டன் பெரிய நிறுவனங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும், மீதமுள்ள 34 மெட்ரிக் டன் மட்டுமே நடுத்தர, ஏழை எளிய மக்கள் பயன்படுத்துகின்றனர்.

தற்போது, செயல்படுத்தப்படும் அம்மா திட்டத்தின் சிமெண்ட் மூலம் மாநில அளவில் மொத்தம் 6 சதவீத்தை மட்டுமே பூர்த்தி செய்ய முடியும். எஞ்சிய சிமெண்ட்களை அதிக விலை கொடுத்த வாங்க வேண்டிய கட்டாயச் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதோடு, அம்மா திட்டத்தில் சிமெண்ட்கள் வாங்க வேண்டுமானால் பல்வேறு வகையான ஆவணங்கள் தயார் செய்ய வேண்டியுள்ளது. பெட்ரோல், டீசல் மற்றும் மூலப்பொருள்கள் ஆகியவை விலை குறைந்துள்ள நிலையில், சிமெண்ட் எதன் அடிப்படையில் உயர்த்தப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.