கரூர் அருகே காதல் தகராறு: பள்ளி மாணவி கத்தியால் குத்தி கொலை
கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் அருகே காதல் தகராறில் 9ம் வகுப்பு பள்ளி மாணவி ஒருவர் குத்திக் கொலை கொலை செய்யப்பட்டார்.


கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் அருகே காதல் தகராறில் 9ம் வகுப்பு பள்ளி மாணவி ஒருவர் குத்திக் கொலை கொலை செய்யப்பட்டார்.
கரூர் மாவட்டம் சின்னதாராபுரத்தை அடுத்த ரங்கபாளையத்தை சேர்ந்த ஈஸ்வரன் மகள் பாரதி பிரியா (14). என்பவரை அதே பகுதியைச் சேர்ந்த மனோஜ்(29), ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் பாரதி பிரியாவின் வீட்டிற்கும் சென்று பெண் கேட்ட போது பாரதி பிரியாவின் பெற்றோர் கொத்தனார் வேலை செய்யும் மனோஜ்க்கு பெண் கொடுக்க மறுத்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த மனோஜ், இன்று காலை பாரதி பிரியா பள்ளிக்கு செல்லும் வழியில் அவரை வழிமறித்து, 14 இடங்களில் கத்தியால் குத்திவிட்டு, தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இருப்பினும் பாரதி பிரியா, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக சின்னதாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...