டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

ஆம்பூரில் ரயிலில் சிக்கி 10 காட்டுபன்றிகள் சாவு

ஆம்பூர் அடுத்த சாணாங்குப்பம் காப்பு காட்டில் அதிக அளவில் காட்டு பன்றிகள் வசித்து வருகின்றன.  புதன்கிழமை அதிகாலை சுமார் 4 மணியளவில் காட்டுபன்றிகள் சில நடராஜபுரம் கானாறு

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:22 am

எம். அருண்குமார்

ஆம்பூரில் புதன்கிழமை அதிகாலை ரயில் தண்டவாளத்தை கடந்த 10 காட்டுபன்றிகள் ரயிலில் சிக்கி இறந்தன.

ஆம்பூர் அடுத்த சாணாங்குப்பம் காப்பு காட்டில் அதிக அளவில் காட்டு பன்றிகள் வசித்து வருகின்றன.  புதன்கிழமை அதிகாலை சுமார் 4 மணியளவில் காட்டுபன்றிகள் சில நடராஜபுரம் கானாறு அருகே ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றன. அப்போது ஆம்பூரில் இருந்து காட்பாடி வழியாக சென்ற ஒரு ரயிலில் 10 காட்டு பன்றிகள் சிக்கி இறந்தன.   அவ்வழியாக சென்ற சிலர் இதுகுறித்து ஆம்பூர் வனச்சரக அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடன் அங்கு வந்த வன ஊழியர்கள் பன்றிகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கன்னிகாபுரம் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு உதவி கால்நடை மருத்துவ அலுவலர் ஜெகதீஷ் பிரேத பரிசோதனை செய்தார்.

பின்னர், பன்றிகளின் சடலங்கள் அருகில் உள்ள கம்பிகொல்லை பகுதியில் இயங்கி வரும் வனச்சரக நர்சரி வளாகத்தில் எரிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.