ஆம்பூரில் புதன்கிழமை அதிகாலை ரயில் தண்டவாளத்தை கடந்த 10 காட்டுபன்றிகள் ரயிலில் சிக்கி இறந்தன.
ஆம்பூர் அடுத்த சாணாங்குப்பம் காப்பு காட்டில் அதிக அளவில் காட்டு பன்றிகள் வசித்து வருகின்றன. புதன்கிழமை அதிகாலை சுமார் 4 மணியளவில் காட்டுபன்றிகள் சில நடராஜபுரம் கானாறு அருகே ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றன. அப்போது ஆம்பூரில் இருந்து காட்பாடி வழியாக சென்ற ஒரு ரயிலில் 10 காட்டு பன்றிகள் சிக்கி இறந்தன. அவ்வழியாக சென்ற சிலர் இதுகுறித்து ஆம்பூர் வனச்சரக அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடன் அங்கு வந்த வன ஊழியர்கள் பன்றிகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கன்னிகாபுரம் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு உதவி கால்நடை மருத்துவ அலுவலர் ஜெகதீஷ் பிரேத பரிசோதனை செய்தார்.
பின்னர், பன்றிகளின் சடலங்கள் அருகில் உள்ள கம்பிகொல்லை பகுதியில் இயங்கி வரும் வனச்சரக நர்சரி வளாகத்தில் எரிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பேருந்து சேவை இல்லாததால் பயணிகள் சாலை மறியல்
இன்றைய ராசி பலன் (24.04.2026) - மகரம்
இன்றைய ராசி பலன் (24.04.2026) - மிதுனம்
இன்றைய ராசி பலன் (24.04.2026) - மேஷம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

