பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்பு
/

அம்மா திட்ட முகாம்: பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

விருதுநகர் அருகே அம்மா திட்ட முகாமில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:19 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே அம்மா திட்ட முகாமில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.

விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், தாதம்பட்டி கிராமத்தில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இம்முகாமிற்கு ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் கி.கலாநிதி தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். இதில், ஆட்சியர் வே.ராஜாராமன் பங்கேற்று பேசுகையில், அரசின் திட்டங்களை பெறுவதற்காக கிராமங்களில் இருந்து தலைநகரங்களுக்கு வருகின்றனர். இதுபோன்ற அலைச்சலை தடுக்கும் வகையில் அரசு செயல்படுத்தும் திட்டங்கள் அனைத்தும் பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டும்.

இதற்காக வாரந்தோறும் குறிப்பிட்ட கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு அம்மா திட்ட முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதில், பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று மனுக்களை அளித்து வருகின்றனர். அதன் அடிப்படையில் இக்கிராமத்தில் நடத்தப்படுகிறது. இம்முகாமில் பெறப்படும் அனைத்து மனுக்களும் ஆய்வு செய்யப்பட்டு தேவையான நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கு பரிசீலனை செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.

அதையடுத்து பொதுமக்கள் கோரிக்கைகள் தொடர்பாக 77 மனுக்களை ஆட்சியரிடம் அளித்தனர். உடனே அந்தந்த துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில், பட்டா மாறுதல், பட்டா பெயர் மாற்றம், இலவச வீட்டு மனை பட்டா, சாதிசான்றிதழ், பிறப்பு இறப்பு சான்றிதழ், வருவாய் சான்றிதழ், குடும்ப அட்டையில் பெயர் நீக்கம் உள்ளிட்ட தகுதியான மனுக்களுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.
இந்த முகாமில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெய அருள்பதி, ஆதிராவிட நலத்துறை அலுவலர் சின்னம்மாள், வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.