2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

கூட்டுறவு நியாய விலைக்கடை ஊழியர் பணியிடை நீக்கம்

விருதுநகர் அருகே சின்னவள்ளிக்குளத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இச்சங்க்ததின் சார்பில் வில்லிபத்திரி கிராமத்தில் பகுதி நேர நியாய கடையும் நடத்தப்பட்டு

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:42 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் கூட்டுறவு நியாய விலைக்கடையில் முறைகேடு செய்த விற்பனையாளரை பணியிடைநீக்கம் செய்து இணைப்பதிவாளர் குருமூர்த்தி உத்தரவிட்டார்.

விருதுநகர் அருகே சின்னவள்ளிக்குளத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இச்சங்க்ததின் சார்பில் வில்லிபத்திரி கிராமத்தில் பகுதி நேர நியாய கடையும் நடத்தப்பட்டு வருகிறது. இப்பகுதி கடையில்  விற்பனையாளர்கள் முறைகேடு செய்து வருவதாக கூட்டுறவு துறைக்கு புகார் வந்தது. அதன் அடிப்படையில் திங்கள்கிழமை அருப்புக்கோட்டை கூட்டுறவு துறை பறக்கும்படை அலுவலர்கள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, இக்குறிப்பிட்டுள்ள கடையில் விற்பனையாளர் முறைகேடு செய்தது தெரியவந்தது. இதையடுத்து விற்பனையாளர் சமுத்திரகனிக்கு ரூ.22,194 வரையில் அபராதமும் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.

இதைத் தொடர்ந்து சின்னவள்ளிக்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன்  சங்கத்தின் நிர்வாகம் விற்பனையாளர் சமுத்திரகனியை பணியிடைநீக்கம் செய்ய கூட்டுறவு துறைக்கும் பரிந்துரைத்தனர். அதன் அடிப்படையில் கூட்டுறவு துறை இணைப்பதிவாளர் குருமூர்த்தி பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.