2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

விருதுநகர் அருகே பெண்ணை மானபங்கம் செய்தவர் கைது 

விருதுநகரை அடுத்த ஆமத்தூர் அருகே உப்போடை பகுதியைச் சேர்ந்தவர் ஆதிலட்சுமி(32). இவருக்கும், இவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:41 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே இளம்பெண்ணை மானபங்கம் செய்து கர்ப்பமாக்கிவிட்டு திருமணம் செய்ய மறுத்தவரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.

விருதுநகரை அடுத்த ஆமத்தூர் அருகே உப்போடை பகுதியைச் சேர்ந்தவர் ஆதிலட்சுமி(32). இவருக்கும், இவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு விவகாரத்து பெற்றார்.தற்போது, இப்பகுதியில் உள்ள தனியார் தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். அப்போது, இவருக்கும் இதே ஆலையில் பணியாற்றி வரும் வடமலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த தவசிராஜனுக்கும் பழக்கம் ஏற்பட்டதாம். இதையடுத்து திருமணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை மானபங்கம் செய்தாராம்.

தற்போது, ஆதிலட்சுமி கர்ப்பமாக உள்ளதால் திருமணம் செய்யும்படி தவசிராஜனிடம் கூறியதை தொடர்ந்து மறுத்து வந்தாராம். உடனே இது தொடர்பாக விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆதிலட்சுமி புகார் செய்தார். அதன் அடிப்படையில் தவசிராஜன் மீது போலீஸார் வழக்கு பதிந்து கைது செய்தனர். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியும், இரு பிள்ளைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.