2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

விருதுநகர் அருகே கார் பைக் மீது மோதியதில் ஊராட்சி தலைவர் சாவு

விருதுநகர் அருகேயுள்ள நடுவப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள்சாமி(62). தற்போது, இவர் இக்கிராமத்தின் ஊராட்சி தலைவராக இருந்து வருகிறார். இந்நிலையில், திங்கள்கிழமை மாலையில்

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:41 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே பின்னால் வந்த கார் இருசக்கர வாகனம் மீது  மோதிய விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த ஊராட்சி தலைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விருதுநகர் அருகேயுள்ள நடுவப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள்சாமி(62). தற்போது, இவர் இக்கிராமத்தின் ஊராட்சி தலைவராக இருந்து வருகிறார். இந்நிலையில், திங்கள்கிழமை மாலையில் சாத்தூரிலிருந்து தனது  கிராமத்திற்கு இருசக்கர வாகனத்தில் திரும்பி வந்து கொண்டிருந்தாரம். அப்போது, அவர் வெங்கடேஸ்வரபுரம் 4 வழிச்சாலை பால இறக்கத்தில் சென்ற போது , கோவில்பட்டியிலிருந்து-விருதுநகர் நோக்கி பின்னால் வந்த கார் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட ஊராட்சி தலைவர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து வச்சக்காரப்பட்டி போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் ஆல்வின் ஞானராஜ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.