/

நித்திரவிளை அருகே 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

குமரி மாவட்ட பறக்கும்படை வட்டாட்சியர் கண்ணன், துணை வட்டாட்சியர் வினைதீர்த்தான், ஓட்டுநர் குமார் ஆகியோர் திங்கள்கிழமை நித்திரவிளை பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:41 am

சி. சுரேஷ்குமார்

நித்திரவிளை அருகே கேரளத்துக்கு கடத்திச் செல்ல பதுக்கி வைத்திருந்த 500 கிலோ ரேஷன் அரிசியை பறக்கும்படை வட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.

குமரி மாவட்ட பறக்கும்படை வட்டாட்சியர் கண்ணன், துணை வட்டாட்சியர் வினைதீர்த்தான், ஓட்டுநர் குமார் ஆகியோர் திங்கள்கிழமை நித்திரவிளை பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சின்னத்துறை பேருந்து நிறுத்தம் அருகே சாக்கு மூட்டைகளில் 500 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்ததும், அவை கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்றதும் தெரியவந்தது. ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவற்றை காப்புக்காடு நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கியில் ஒப்படைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.