2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

நரிக்குடி அருகே ஆமணக்கு விதைகளை சாப்பிட்ட சிறுவர்களுக்கு வாந்தி மயக்கம்

விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே ஆமணக்கு விதைகளை சாப்பிட்ட 5 சிறுவர்கள் வாந்தி ஏற்பட்டு மயக்கமடைந்ததை தொடர்ந்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிரமாக சிகிச்சை

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:40 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே ஆமணக்கு விதைகளை சாப்பிட்ட 5 சிறுவர்கள் வாந்தி ஏற்பட்டு மயக்கமடைந்ததை தொடர்ந்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நரிக்குடி அருகே பரளச்சி காவல் சரகத்தைச் சேர்ந்தது நல்லாங்குளம் கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்த சிறுவர், சிறுமிகள் அங்குள்ள நல்லாங்குளம் மாரியம்மன் கோயில் முன்பு முத்துராமலிங்கத்தின் மகன் முத்துக்கிருஷ்ணன்(3), பூமிநாதன் மகன் அசோக்(7), ராமநாதன் மகன் முத்துக்காளை(4), முனியசாமியின் மகன் முத்துமணி(3) மற்றும் ராமநாதனின் மகள் தனலட்சுமி(3) ஆகியோர் சனிக்கிழமை மாலையில் விளையாடிக் கொண்டிருந்தார்களாம்.

அப்போது, அக்கோயில் முன்பு ஆமணக்கு விதைகள் சிதறி கிடந்துள்ளது. அதை முந்திரிகொட்டைகள் என நினைத்து எடுத்து சாப்பிட்டார்களாம். அதைத் தொடர்ந்து உடனே வாந்தி ஏற்பட்டு மயக்கமும் அடைந்தார்களாம். இதையடுத்து உடனே அருகில் உள்ள ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று, 5 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.