பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

தங்க பிஸ்கெட் வாங்கித் தருவதாக ரூ.25 லட்சம் மோசடி

தங்க பிஸ்கெட் வாங்கித்தருவதாகக்கூறி இளைஞரிடம் ரூ.25 லட்சம் மோசடி செய்த இருபெண்கள் உள்ளிட்ட மூவர் மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:38 am

ஏ. அருள்ராஜ்

தங்க பிஸ்கெட் வாங்கித்தருவதாகக்கூறி இளைஞரிடம் ரூ.25 லட்சம் மோசடி செய்த இருபெண்கள் உள்ளிட்ட மூவர் மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தைச் சேர்ந்தவர் போத்திராஜா(36). இவரிடம் கடந்த ஆண்டு அக்.18-ம்தேதி அதே பகுதியைச் சேர்ந்த லீலாவதி, ரவிக்குமார், நதியா ஆகியோர் கரூரில் தொழில் அதிபர் ஒருவரிடம் தங்க பிஸ்கெட் இருப்பதாகவும், அவற்றை குறைந்த விலையில் வாங்கித்தருவதாகவும் கூறி மூன்று தவணையாக ரூ.25 லட்சம் பெற்றுள்ளனர்.

இதனிடையே கடந்த ஆண்டு நவ,13-ம் தேதி மற்றும் 23-ம் தேதி போத்திராஜாவை அழைத்துக்கொண்டு கரூரில் உள்ள ஓட்டலில் தங்கிய அவர்கள், தங்க பிஸ்கட் வாங்கி கொடுக்கவில்லையாம். இதனால் தன்னிடம் தங்க பிஸ்கட் வாங்கித்தருவதாக மோசடி செய்துவிட்டனர் என போத்திராஜ் திங்கள்கிழமை கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப்பதிந்து லீலாவதி உள்ளிட்ட மூவரையும் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.