எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

காங்கிரஸ் கட்சியின் வட்டார நிர்வாகிகள் நியமனம் 

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி ஒன்றிய காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் மாவட்ட தலைவர் எஸ்.வேலாயுதம் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 6:20 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி ஒன்றிய காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் மாவட்ட தலைவர் எஸ்.வேலாயுதம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அக்கட்சியின் மாவட்ட தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம்: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உத்தரவின் படியும், முன்னாள் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பரிந்துரையின் பேரில் சிவகாசி ஒன்றியம் பிரிக்கப்பட்டு கிழக்கு வட்டாரம் உருவாக்கப்பட்டு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதில், கிழக்கு வட்டார தலைவராக சித்தமநாயக்கன்பட்டி எம்.எம்.சீனிவாசன், மாவட்ட செயலாளராக காட்டுராஜா, வட்டார துணைத் தலைவர்களாக ரெங்கபாளையம் பொன்னுப்பாண்டி, தச்சகுடி பொன்னுச்சாமி, நெடுங்குளம் முருகேசன், வட்டார செயலாளர்களாக அங்கப்பன், ஈஸ்வரன், பாண்டி, இருளப்பன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளதால் அவர்களுக்கு காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.