விருதுநகர் பகுதியில் செவ்வாய்கிழமை பகலில் கடும் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் மாலையில் திடீரென கருமேகம் சூழ்ந்து பரவலான மழை பெய்தது. இதனால் நகர் பகுதியில் நிலவி வந்த வெப்பம் தணிந்து குளிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மழையால் சாலைகளிலும், தெருக்களிலும் பெருக்கெடுத்து கழிவு நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதில், காந்திரபுரம், கச்சேரி சாலை, பஜார் சாலை, தந்திமரத்தெரு, மீனாம்பிகை பங்களா, இந்திரா நகர் உள்ளிட்ட மேடான பகுதிகளில் இருந்து வரும் கழிவு நீர் அனைத்தும், தாழ்வான பகுதியாக உள்ள பழைய பேருந்து நிலையத்தில் குளம்போல் தேங்குகிறது.