தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

விருதுநகரில் தனியார் பொறியியல் கல்லூரிக்கு சீல்

விருதுநகரில் தனியார் பொறியியல் கல்லூரியில் அனுமதி பெறாமல் கட்டப்பட்ட அறைகளுக்கு மதுரை மண்டல நகர ஊரமைப்புத்துறை அலுவலர்கள் சீல் வைத்து புதன்கிழமை நடவடிக்கை

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:09 am

எஸ். பாண்டியன்

விருதுநகரில் தனியார் பொறியியல் கல்லூரியில் அனுமதி பெறாமல் கட்டப்பட்ட அறைகளுக்கு மதுரை மண்டல நகர ஊரமைப்புத்துறை அலுவலர்கள் சீல் வைத்து புதன்கிழமை நடவடிக்கை எடுத்தனர்.

மாநிலம் முழுவதும் நகரமைப்பு துறையிடம் அனுமதி பெறாமலும், விதிமுறை மீறி கட்டடங்களை அமைத்துள்ள பொறியியல் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் விருதுநகர்-சிவகாசி சாலையில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பொறியியல் கல்லூரிக்கு நகர ஊரமைப்புத்துறையின் துணை இயக்குநர் தலைமையில் வருவாய் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட  அதிகாரி குழுவினர் வந்தனர். அக்கல்லூரி வளாகத்தில் அனுமதி பெறாமல்  அமைக்கப்பட்டுள்ள முதல்வர் மற்றும் அலுவலக அறை ஆகியவைகளுக்கு சீல் வைத்தனர்.

இது தொடர்பாக மதுரை மண்டல நகரமைப்பு துறையின் இணை இயக்குநர் மரியம்தாஸ் கூறுகையில், பொறியியல் கல்லூரிகளில் கூடுதல் அறைகள் அமைப்பதற்கு நகர ஊரமைப்பு துறையிடம் கட்டாயம் அனுமதி பெற வேண்டும். ஆனால், இக்கல்லூரியில் அனுமதி பெறாமல் விதிமுறை மீறி கூடுதலாக அறைகளை அமைத்துள்ளனர். ஏற்கனவே இது தொடர்பாக பல்வேறு தடவை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், கல்லூரி நிர்வாகத்தினர் பதில் அளிக்க முன்வரவில்லை. மாணவ, மாணவிகளின் எதிர்காலம் கருதியே முதல்வர் மற்றும் அலுவலக வளாகத்திற்கு மட்டும் சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.