தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

விருதுநகர் சட்டப்பேரவை உறுப்பினருக்கு கொலை மிரட்டல்: எஸ்.பியிடம் புகார்

விருதுநகர் சட்டப்பேரவை உறுப்பினர் க.பாண்டிராஜனுக்கு வந்த கொலை மிரட்டல் கடிதம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் சனிக்கிழமை மாலையில் நேரில் புகார் செய்தார்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:08 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் சட்டப்பேரவை உறுப்பினர் க.பாண்டிராஜனுக்கு வந்த கொலை மிரட்டல் கடிதம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் சனிக்கிழமை மாலையில் நேரில் புகார் செய்தார்.

விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணியை அமைப்பதற்கான பணியினை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். இப்பால பணியை மேற்கொள்ளும் போதெல்லாம் அப்பகுதியில் உள்ளோர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து தடையுத்தரவு பெற்று இடையூறு செய்து வருகின்றனர். இந்நிலையில், சட்டப்பேரவை தேர்தலின் போது அப்போதைய முதல்வர் ராமமூர்த்தி சாலையில் மேம்பாலம் அமைக்கப்படும் என உறுதி அளித்தார். அதைத் தொடர்ந்து சட்டப்பேரவை உறுப்பினரும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், விருதுநகர் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்திற்கும், அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு எதிரேயுள்ள இவரது சொர்ணாம்மாள் அறக்கட்டளை அலுவலக முகவரிக்கும் அஞ்சலில் ஒரு கடிதம் அனுப்பியுள்ளனர். அதில், விருதுநகர் சட்டப்பேரவை தொகுதியின் வந்தேரி பாண்டியராஜனே, ராமமூர்த்தி மேம்பால விஷயத்தில் இனியும் தலையிட்டால் தலை இருக்காது என்றும் இதுவே இறுதி எச்சரிக்கை என்றும் முடிக்கப்பட்டிருந்தது. அதோடு, அபாய எச்சரிக்கை குறிப்பிட்ட தலைப்படம் மற்றும் அரிவாள் வரைந்திருந்தது.

இது தொடர்பாக விருதுநகர் சட்டப்பேரவை உறுப்பினர் க.பாண்டியராஜன் மாவட்ட காவல் துறை கண்காணி்ப்பாளர் எஸ்.மகேஸ்வரனிடம் மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு நேரில் புகார் செய்தார். அதையடுத்து, நடவடிக்கை எடுப்பதாக எஸ்.பியும் உறுதியளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.