தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

விருதுநகர் அருகே அதிகமாக மதுக்குடித்த தொழிலாளி சாவு 

விருதுநகர் அருகே அதிகமாக மதுக்குடித்த தொழிலாளி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:06 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே அதிகமாக மதுக்குடித்த தொழிலாளி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

விருதுநகர் அருகே சின்னமூப்பன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி முத்துவேல்பாண்டி(42). இவர் குடிப்பழக்கம் உடையவாராம். இந்நிலையில் தனது மனைவி பாக்கியத்துடன் திங்கள்கிழமை இரவு விருதுநகர் மாரியம்மன் கோயில் திருவிழாவிற்கு சென்றார். அங்கு திருவிழாவை பார்த்து விட்டு இரவில் மனைவியை வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டு, அப்பகுதியில் மதுக்குடிப்பதற்காக சென்றுள்ளார்.

ஆனால், அதைத் தொடர்ந்து வடமலைக்குறிச்சி மாலையம்மன் கோயில் அருகே மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தாராம். இது தொடர்பாக அவரது மனைவி பாக்கியம் ஆமத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து அளவுக்கு அதிகமாக மதுக்குடித்ததால் உயிரிழந்தாரா அல்லது விஷம் கலந்து குடித்து உயிரிழந்தாரா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.