மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

ஏப்.9-ல் ரயில் மறியல் போராட்டம்

காவிரியாற்றின் குறுக்கே அணைக் கட்டுவதை தடுக்கக் கோரி ஏப்ரல் 9-ம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்துவது என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.

Updated On :5 ஏப்ரல் 2015, 2:39 am

காவிரியாற்றின் குறுக்கே அணைக் கட்டுவதை தடுக்கக் கோரி ஏப்ரல் 9-ம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்துவது என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.

திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு விவசாயிகள்- விவசாயத் தொழிலாளர் சங்கங்களின் ஆளோசனைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இதர தீர்மானங்கள்:

காவிரியாற்றின் குறுக்கே மேக்கேதாட்டுப் பகுதியில் புதிய அணையைக் கட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்கர்நாடக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும், காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி நீர் ஒழுங்குமுறை குழுவையும் உடனடியாக அமைக்க வேண்டும்  போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்டா மாவட்டங்கள் மற்றும் அரியலூர், புதுக்கோட்டை, கடலூர் மாவட்டங்களில் ஏப்ரல் 9-ம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்துவது,. திருச்சி ஜங்சன் ரயில் நிலையத்தில் சங்கத்தின் மாநிலத் தலைவர் வே. துரைமாணிக்கம் தலைமையில் போராட்டத்தில் ஈடுபடுவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு விவசாயச் சங்கங்களின் மாவட்டத் தலைவர்கள் ம. சுப்பிரமணி, சி. மாசிலாமணி தலைமை வகித்தனர்.

மாவட்டச் செயலர்கள் அயிலை சிவசூரியன், வி.சிதம்பரம், இந்திய கம்யூனிஸ்ட் மாநகர் மாவட்டச் செயலர் க.சுரேஷ்,  தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர் பி.கணேசன் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.