மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்திய தேமுதிக எம்.எல்.ஏ.

சேலம் மாநகராட்சிக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் கூட்ட அரங்கிற்குள் நுழைந்த தேமுதிக எம்.எல்.ஏ. ஆணையரிடம் மனுவைக் கொடுத்துவிட்டு, அவரை

Updated On :26 செப்டம்பர் 2014, 1:51 pm

சேலம் மாநகராட்சிக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் கூட்ட அரங்கிற்குள் நுழைந்த தேமுதிக எம்.எல்.ஏ. ஆணையரிடம் மனுவைக் கொடுத்துவிட்டு, அவரை கடிந்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

 மாநகராட்சிக் கூட்டத்தில் துணை மேயர் நடேசன் பேசிக் கொண்டிருந்தபோது, வடக்கு தொகுதி தேமுதிக எம்.எல்.ஏ.வும், சட்டப் பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான அழகாபுரம் மோகன்ராஜ் கையில் ஒரு மனுவுடன் கூட்ட அரங்கிற்குள் திடீரென நுழைந்தார்.

 ஆணையர் முன்பு சென்ற அவர் அந்த மனுவை அவரிடம் வழங்கினார். அதைப் பெறுவதற்கு ஆணையர் க.இரா.செல்வராஜ் தயக்கத்துடன் எழுந்தார். இதனால் அவரைப் பார்த்துப் பேசிய மோகன்ராஜ், நான் ஒரு எம்.எல்.ஏ. எனக்கு மரியாதை இல்லையா மனுவை எழுந்து வாங்க முடியாதா என்று கேட்டார். பின்னர் மனுவைக் கொடுத்துவிட்டு அரங்கிலிருந்து சென்றார்.

 இதற்கிடையே மனு அளிக்க வந்த மோகன்ராஜை, மேயர் செüண்டப்பன் வந்து அமருங்கள் என்றும், துணை மேயர் நடேசன் புன்னகையுடன் சென்று வாருங்கள் என்றும் கூறினர். இருப்பினும் கூட்ட அரங்கில் இருந்த அதிமுக கவுன்சிலர்கள் அனைவரும், தேமுதிக எம்.எல்.ஏ.வின் இந்த செயலுக்கு கடுமையான கண்டனத்தைத் தெரிவித்தனர்.

 இதையடுத்து எம்.எல்.ஏ.வுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று நடேசனும் கூறினார். கூட்ட அரங்கில் அனுமதியின்றி நுழைந்து ஆணையரை அவமதித்துச் சென்றதாகக் கூறி மேயரும் கண்டனம் தெரிவித்தார். இருப்பினும் சமாதானம் அடையாத அதிமுக உறுப்பினர்கள், எம்.எல்.ஏ. மீது காவல்துறையில் புகார் தெரிவிக்க வேண்டும் என்றனர்.

 இது குறித்து ஆணையர் கூறும்போது, சம்பவம் நடைபெற்ற இடம் மேயரின் கட்டுப்பாட்டில் இருந்த இடம் எனவே அவர்தான் புகார் தெரிவிக்க வேண்டும் என்றார். மேயர் கூறும்போது, இது குறித்து ஆணையர்தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறிவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.