இதன்படி கடந்த 2012-ம் ஆண்டு செப்டம்பர் 14-ம் தேதி ஒரு கும்பல் ராமசாமியின் வீட்டுக்குத் தீ வைத்து விட்டுத் தப்பிச் சென்றனர். இதில் ராமசாமி, குப்பம்மாள் இருவரும் படுகாயம் அடைந்தனர். சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இவர்கள், நீதிபதி ரபீக்கிடம் மரண வாக்குமூலம் கொடுத்தனர்.அதில், தனது வீட்டுக்கு வைத்தீஸ்வரன், உறவினர்கள் கே.ராமசாமி (54), கே.ராஜேந்திரன் (48), ஏ.வெங்கட்ட ரெட்டி (49) ஆகியோர் தீ வைத்ததாகக் கூறியிருந்தனர். பின்னர் அவர்கள் இருவரும் மருத்துவமனையிலேயே உயிரிழந்தனர்.