கோ-ஆப் டெக்ஸ் ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் பொதுச் செயலர் ஏ.அந்தோணிராஜ் தலைமை தாங்கினார். துணைத் தலைவர்கள் குமார், பாலசுப்பிரமணியன், ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.செயலர்கள் பிரேம்குமார், ராமநாதன், சேகர், இணைச் செயலர் ஜெகதீசன், பொருளாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். இதில், இலவச வேஷ்டி-சேலை திட்டத்தை மீண்டும் கோ-ஆப் டெக்ஸ் மூலமே நடத்த அரசு உத்தரவிட வேண்டும்.மாவட்டம்தோறும் கோ-ஆப் டெக்ஸ் நிறுவனத்துக்கு கிடங்கு வசதி இருந்தும் தனியாருக்கு சொந்தமான கிடங்குகளை வாடகைக்கு அமர்த்தி பணத்தை செலவிடுவதைக் கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 25-ம் தேதி வேலை நிறுத்தம் செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.