நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

கோரிக்கைகளை வலியுறுத்தி 25-ம் தேதி வேலை நிறுத்தம்: கோ-ஆப் டெக்ஸ் ஊழியர்கள் அறிவிப்பு

கோ-ஆப் டெக்ஸ் ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் பொதுச் செயலர் ஏ.அந்தோணிராஜ் தலைமை தாங்கினார். துணைத் தலைவர்கள் குமார்,

News image
Updated On :5 ஜனவரி 2024, 6:42 am

க. தங்கராஜா

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 25-ம் தேதி (வியாழக்கிழமை) வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என்று கோ-ஆப் டெக்ஸ் ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.

கோ-ஆப் டெக்ஸ் ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் பொதுச் செயலர் ஏ.அந்தோணிராஜ் தலைமை தாங்கினார். துணைத் தலைவர்கள் குமார், பாலசுப்பிரமணியன், ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.செயலர்கள் பிரேம்குமார், ராமநாதன், சேகர், இணைச் செயலர் ஜெகதீசன், பொருளாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். இதில், இலவச வேஷ்டி-சேலை திட்டத்தை மீண்டும் கோ-ஆப் டெக்ஸ் மூலமே நடத்த அரசு உத்தரவிட வேண்டும்.மாவட்டம்தோறும் கோ-ஆப் டெக்ஸ் நிறுவனத்துக்கு கிடங்கு வசதி இருந்தும் தனியாருக்கு சொந்தமான கிடங்குகளை வாடகைக்கு அமர்த்தி பணத்தை செலவிடுவதைக் கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 25-ம் தேதி வேலை நிறுத்தம் செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.