மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

கோரிக்கைகளை வலியுறுத்தி 25-ம் தேதி வேலை நிறுத்தம்: கோ-ஆப் டெக்ஸ் ஊழியர்கள் அறிவிப்பு

கோ-ஆப் டெக்ஸ் ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் பொதுச் செயலர் ஏ.அந்தோணிராஜ் தலைமை தாங்கினார். துணைத் தலைவர்கள் குமார்,

Updated On :7 செப்டம்பர் 2014, 12:01 pm

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 25-ம் தேதி (வியாழக்கிழமை) வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என்று கோ-ஆப் டெக்ஸ் ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.

கோ-ஆப் டெக்ஸ் ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் பொதுச் செயலர் ஏ.அந்தோணிராஜ் தலைமை தாங்கினார். துணைத் தலைவர்கள் குமார், பாலசுப்பிரமணியன், ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.செயலர்கள் பிரேம்குமார், ராமநாதன், சேகர், இணைச் செயலர் ஜெகதீசன், பொருளாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். இதில், இலவச வேஷ்டி-சேலை திட்டத்தை மீண்டும் கோ-ஆப் டெக்ஸ் மூலமே நடத்த அரசு உத்தரவிட வேண்டும்.மாவட்டம்தோறும் கோ-ஆப் டெக்ஸ் நிறுவனத்துக்கு கிடங்கு வசதி இருந்தும் தனியாருக்கு சொந்தமான கிடங்குகளை வாடகைக்கு அமர்த்தி பணத்தை செலவிடுவதைக் கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 25-ம் தேதி வேலை நிறுத்தம் செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.