மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகி தலையணையில் இருந்து வரும் தண்ணீரானது ராயகிரி பாகம் 2-இல் முறியபாஞ்சன் என்ற இடத்தில் உள்ளார் வழியாக ஒரு ஆற்றுப் பாதையிலும், ராசிங்கபேரி குளத்துக்கு மற்றொரு பாதையிலும் பிரிந்து செல்கிறது. உள்ளார் வழியாக வரும் தண்ணீரானது உள்ளார், தளவாய்புரம், ராயகிரி, மேலகரிசல்குளம், கீழ கரிசல்குளம், தென்மலை, துரைசாமியார்புரம், இடையன்குளம், எட்டிச்சேரி, இனாம்கோவில்பட்டி வழியாக 13 ஆயக்கட்டு குளங்களுக்கு தண்ணீர் செல்ல வேண்டும். இதுதொடர்பாக, உள்ளாமுறியபாஞ்சன் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கடந்த 1998-இல் அப்போதைய மாவட்ட ஆட்சியரின் உத்தரவை ஏற்று, பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி 13 குளங்களுக்கு தண்ணீர் செல்ல வேண்டும் என பரிந்துரை செய்தனர்.