மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

புயல் சின்னம் காரணமாக ரயில்கள் தாமதமாக வாய்ப்பு

ஹூட் ஹூட் புயல் காரணமாக சேலம் மார்க்கத்தில் செல்லும் சில ரயில்கள் தாமதமாக வாய்ப்பு இருப்பதாக ரயில்வே அறிவித்துள்ளது.இது குறித்து சேலம் கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் ஜி.வி.வெங்கடேசன்

Updated On :11 அக்டோபர் 2014, 12:17 pm

ஹூட் ஹூட் புயல் காரணமாக சேலம் மார்க்கத்தில் செல்லும் சில ரயில்கள் தாமதமாக வாய்ப்பு இருப்பதாக ரயில்வே அறிவித்துள்ளது.இது குறித்து சேலம் கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் ஜி.வி.வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ஹூட் ஹூட் புயல் ஆந்திர, ஒடிசா மாநிலங்களைக் கடக்க இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் கீழ்க்கண்ட ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படும் வாய்ப்பு உள்ளதால் மாற்றுப் பாதையின் இரு மார்க்கங்களிலும் தாமதம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.தன்பாத்தில் இருந்து 11-ம் தேதி புறப்படும் ரயில் (எண் 13351) தன்பாத் - ஆலப்புழா விரைவு ரயில் ஜார்சுகுடா, ராய்பூர், நாக்பூர் வழியாக மாற்றி இயக்கப்படும். ஆலப்புழாவில் இருந்து 10-ம் தேதி புறப்படும் ரயில் (எண் 13352) ஆலப்புழா - தன்பாத் விரைவு ரயில் விஜயவாடா, பலாஷா, நாக்பூர், ஜார்சுகுடா வழியாக மாற்றி இயக்கப்படும்.

அதேபோல், திருவனந்தபுரத்தில் இருந்து 11-ம் தேதி புறப்படும் ரயில் (எண் 22641) திருவனந்தபுரம் - ஷாலிமார் விரைவு ரயில் விஜயவாடா, பலாஷா, நாக்பூர் வழியாக மாற்றி இயக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.