இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை காலையில் சிவசிதம்பரம் தொழிற்சாலைக்கு வந்து பார்க்கையில் கேட்டு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தாராம். அதையடுத்து, உள்ளே சென்று பார்க்கையில் யாரோ அடையாளம் தெரியாத நபர்கள் நவீன பருப்பு அரவை இயந்திர பாகங்களை தனித்தனியாக கழட்டி எடுத்துச் சென்றுள்ளது தெரியவந்தது. உடனே இது தொடர்பாக விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்தில் சிவசிதம்பரம் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து பூட்டியிருந்த கேட்டை உடைத்து பருப்பு உடைக்கும் இயந்திர பாகங்களை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும், திருடு போன இயந்திரத்தின் மதிப்பு ரூ.3.50 லட்சம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.