அதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

விருதுநகர் அருகே பருப்பு ஆலையில் ரூ.3.50 லட்சம் மதிப்பிலான இயந்திரம் திருட்டு

விருதுநகர் அருகே அல்லம்பட்டியைச் சேர்ந்தவர் சிவசிதம்பரம்(45). இவர் இப்பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர்.நகரில் பருப்பு அரவை செய்யும் தொழிற்சாலையை நடத்தி வருகிறார். இந்த ஆலையில் சனிக்கிழமை

News image
Updated On :5 ஜனவரி 2024, 7:33 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே பருப்பு அரவை தொழிற்சாலையில் ரூ.3.50 லட்சம் மதிப்பிலான இயந்திரத்தை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர் அருகே அல்லம்பட்டியைச் சேர்ந்தவர் சிவசிதம்பரம்(45). இவர் இப்பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர்.நகரில் பருப்பு அரவை செய்யும் தொழிற்சாலையை நடத்தி வருகிறார். இந்த ஆலையில் சனிக்கிழமை வழக்கம் போல் செயல்பட்ட நிலையில் மாலையில் பணிகள் முடிந்ததும் தொழிலாளர்கள் பூட்டி விட்டு உரிமையாளரிடம் சாவியை கொடுத்து விட்டு சென்றார்களாம்.

இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை காலையில் சிவசிதம்பரம் தொழிற்சாலைக்கு வந்து பார்க்கையில் கேட்டு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தாராம். அதையடுத்து, உள்ளே சென்று பார்க்கையில் யாரோ அடையாளம் தெரியாத நபர்கள் நவீன பருப்பு அரவை இயந்திர பாகங்களை தனித்தனியாக கழட்டி எடுத்துச் சென்றுள்ளது தெரியவந்தது. உடனே இது தொடர்பாக விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்தில் சிவசிதம்பரம் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து பூட்டியிருந்த கேட்டை உடைத்து பருப்பு உடைக்கும் இயந்திர பாகங்களை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும், திருடு போன இயந்திரத்தின் மதிப்பு ரூ.3.50 லட்சம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.