அதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

விருதுநகரில் மாநில வேளாண்மை ஊரக வளர்ச்சி வங்கிகளை கணினி மயமாக்கும் திட்டம் தொடர்பான கூட்டம்

தமிழ்நாடு கூட்டுறவு மாநில வேளாண்மை ஊரக வளர்ச்சி வங்கியின் சார்பில் தொடக்க வேளாண்மை ஊரக வளர்ச்சி வங்கி கிளைகளை கணினி மயமாக்கும் திட்டம் தொடர்பாக அலுவலர்களுடனான சிறப்புக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :5 ஜனவரி 2024, 7:32 am

எஸ். பாண்டியன்

: தமிழ்நாடு கூட்டுறவு மாநில வேளாண்மை ஊரக வளர்ச்சி வங்கியின் சார்பில் தொடக்க வேளாண்மை ஊரக வளர்ச்சி வங்கி கிளைகளை கணினி மயமாக்கும் திட்டம் தொடர்பாக அலுவலர்களுடனான சிறப்புக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
    மாநில வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி கிளைகள் அனைத்தையும்   கணினிமயமாக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மண்டல இணைப்பதிவாளர் சி.குருமூர்த்தி தலைமை வகித்தார். துணைப் பொதுமேலாளர் கே.சண்முகம் முன்னிலை வகித்தார். 
    இதில், தமிழ்நாடு கூட்டுறவு மாநில வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் மேலாண்மை இயக்குநர் கே.எம்.வெள்ளியங்கிரி பங்கேற்று பேசியதாவது: மாநில வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் சார்பில் 25 மாவட்ட அளவிலான வங்கிகளும், 180 தொடக்க கிளைகளும் செயல்பட்டு வருகிறது. தற்போது, இந்த வங்கியின் மூலம் விவசாயிகளுக்கு மத்தியகால கடன், நீண்ட கால கடன், விவசாய நகை கடன் மற்றும் விவசாயிகளுக்கு பல்வேறு வகையான வேளாண்மை கருவிகள், டிராக்டர் போன்றவைகள் வாங்குவதற்கு கடன் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரையில் கடன் விவரங்கள் முழுவதும் பதிவேடுகளிலும், கணிப்பொறிகளில் பதிவு செய்து பராமரிக்கப்பட்டது. இதை மாற்றும் வகையிலும், மற்ற தேசிய வங்கி கிளைகளை போல் விவசாயிகளுக்கு சேவை வழங்கும் வகையில் நவீனமாக்குவதற்காக தனி மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கணினிமயமாக்கி இணைய தள வசதியை அடுத்த வரும் 3 மாதத்திற்குள் நிறைவேற்ற அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், எவ்வாறு பதிவு செய்வது குறித்து அரசு அனுமதிபெற்ற ஆன்வர்டு இ சர்வீஸ் நிறுவனத்தின் அலுவலர்கள் பயிற்சி அளித்து வருவதாக அவர் தெரிவித்தார்.
     பின்னர் தனியார் மென்பொருள் நிறுவனத்தினர் கணக்கு பதிவேடுகளை கணிப்பொறிகளில் எவ்வாறு பதிவேற்றம் செய்ய வேண்டும் என்பது குறித்து அலுவலர்களுக்கு பயிற்சி அளித்தனர். இதில், 18 மாவட்ட வங்கிக் கிளைகளைச் சேர்ந்த மேலாளர்கள், செயலர்கள் மற்றும் அலுவலர்கள் என 120 பேர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அலுவலர்கள் செய்திருந்தனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.