அதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

சாத்தூர் அருகே ஆசிரியை, பயிற்சி ஆசிரியைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: முதன்மைக் கல்வி அலுவலரிடம் புகார்

சாத்தூர் அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் மீது முதுகலை பட்டதாரி ஆசிரியை மற்றும் பயிற்சி ஆசிரியைகள் ஆகியோர் பாலியல் தொந்தரவு தொடர்பாக பொய்யான புகார்

News image
Updated On :5 ஜனவரி 2024, 7:30 am

எஸ். பாண்டியன்

சாத்தூர் அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் மீது முதுகலை பட்டதாரி ஆசிரியை மற்றும் பயிற்சி ஆசிரியைகள் ஆகியோர் பாலியல் தொந்தரவு தொடர்பாக பொய்யான புகார் அளித்துள்ளதாக கூறி தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் கழகத்தினன் சார்பில் கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் மனு அளித்தனர்.

இது தொடர்பாக ஆசிரியர்களின் சார்பில் தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட தலைவர் அண்ணாத்துரை தலைமையில் ஆசிரியர்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமாரிடம் நேரில் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே சின்னக்காமன்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின் முதுகலை ஆசிரியை மற்றும் பயிற்சி ஆசிரியைகள் ஆகியோருக்கு, இங்கு பணியாற்றி வரும் முதுகலை ஆசிரியர், தலைமையாசிரியர், மற்றும் பட்டதாரி ஆசிரியர் ஆகிய 3 பேர் பாலியல் தொந்தரவு செய்ததாக கல்வித்துறை அதிகாரியிடம் பொய்ப்புகார் அளித்துள்ளனர்.

எனவே எங்கள் மீது உள்நோக்கத்துடன் புகார் செய்துள்ளது தெரியவருகிறது. அதனால் பள்ளியில் பணியாற்றும் போது பிரச்னை ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. அதனால், பள்ளிக்கு காவல் துறையினர் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட ஆசிரியர்களின் சார்பாக தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட தலைவர் அண்ணாத்துரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமாரிடம் நேரில் அளித்துள்ள மனுவில் தெரிவித்துள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.