இது தொடர்பாக ஆசிரியர்களின் சார்பில் தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட தலைவர் அண்ணாத்துரை தலைமையில் ஆசிரியர்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமாரிடம் நேரில் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே சின்னக்காமன்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின் முதுகலை ஆசிரியை மற்றும் பயிற்சி ஆசிரியைகள் ஆகியோருக்கு, இங்கு பணியாற்றி வரும் முதுகலை ஆசிரியர், தலைமையாசிரியர், மற்றும் பட்டதாரி ஆசிரியர் ஆகிய 3 பேர் பாலியல் தொந்தரவு செய்ததாக கல்வித்துறை அதிகாரியிடம் பொய்ப்புகார் அளித்துள்ளனர்.