தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

போலி கடன் அட்டை மூலம் நகை வாங்கி மோசடி: இளைஞர் கைது

ராமநாதபுரம் அரண்மனை வீதியைச் சேர்ந்தவர் முத்துக்கருப்பு(24). இவரும், மற்றொரு இளைஞரும் சேர்ந்து சிவகாசி பேருந்து நிலைய சாலையில் உள்ள தனியார் நகைக்கடைக்கு வெள்ளிக்கிழமை மாலையில் நகை

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:28 am

எஸ். பாண்டியன்

சிவகாசி தனியார் நகைக்கடையில் போலி வங்கி கடன் அட்டை (கிரிடிட் கார்டு) மூலம் நகை வாங்கி மோசடி செய்த இளைஞரை கடைக்காரர்கள் மடக்கி பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

ராமநாதபுரம் அரண்மனை வீதியைச் சேர்ந்தவர் முத்துக்கருப்பு(24). இவரும், மற்றொரு இளைஞரும் சேர்ந்து சிவகாசி பேருந்து நிலைய சாலையில் உள்ள தனியார் நகைக்கடைக்கு வெள்ளிக்கிழமை மாலையில் நகை வாங்குவதற்காக வந்தார்களாம். அங்குள்ள நகை வகைகளை கண்டறிந்து வாங்கியுள்ளனர். பின்னர் நகைக்கான விலையை செலுத்துவதற்காக குறிப்பிட்ட வங்கி கிளையின் கடன் அட்டையை காண்பித்துள்ளனர்.

அந்த நபர்களிடம் இருந்து முகவரி உறுதி செய்வதற்கான ஆவணச் சான்று கேட்டடுள்ளனர். அப்போது, முத்துக்கருப்பின் ஓட்டுநர் அடையாள அட்டையை கொடுத்துள்ளார். உடனே கடன் அட்டையை கணிப்பொறியில் செலு்ததி பார்த்துள்ளனர். அப்போது, இக்கடன் அட்டை போலி என்பதும், இதே அட்டை மூலம் விழுப்புரத்தில் உள்ள இதே கிளையில் நகை வாங்கி மோசடி செய்திருந்ததும், அது தொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் இருந்து இமெயில் தகவல் அனுப்பியிருப்பதும் தெரியவந்தது.

இதைப் பார்த்து உஷரான இளைஞர்கள் உடனே இருவரும் வெளியேறி தப்பியோடினர். பின் தொடர்ந்து சென்ற ஊழியர்கள் சிவகாசி பேருந்து நிலையப் பகுதியில் முத்துக்கருப்பை மடக்கி பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். மற்றொரு இளைஞர் அவ்வழியாக சென்ற பேருந்தில் ஏறி தப்பினார். இது தொடர்பாக நகைகடையின் மேலாளர் ராஜேஸ்வரன் சிவகாசி டவுன் போலீஸாரிடம் புகார் செய்தார். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து கைதானவரிடம் மோசடி செய்தது தொடர்பாகவும், தப்பியோடிய இளைஞர் குறித்தும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.