கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை அருகே உள்ள திம்மாட்சிபுரத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு போலி ஆவணம் தயாரித்து சிலர் மோசடி செய்வதாக குளித்தலை கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் பாலமுருகனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் வங்கியில் கணக்கினை ஆய்வு செய்த போது, 2007-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை, வங்கியில் போலி ஆவணம் தயாரித்து நிலம் இல்லாதவர்களுக்கு நிலம் இருப்பதாகக் கூறி கடனும், ஏற்கனவே கடன் வழங்கியவருக்கு மீண்டு கடன் கொடுத்தது உள்ளிட்டவைத் தொடர்பாக ரூ.2லட்சத்து 17 ஆயிரத்து 69 மோசடி செய்திருப்பது தெரியவந்தது.