மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

கருத்துக்கணிப்புகளை எண்ணி தொண்டர்கள் அஞ்சி நடுங்கி மூலையில் முடங்கிப்போகமாட்டார்கள்: ஸ்டாலின்

கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் நன்னியூர் ராஜேந்திரனின் தந்தையும், கரூர் வட்ட திமுக முன்னாள் செயலருமான என்.கே.காந்தியின் படத்திறப்பு நிகழ்ச்சி கரூர் ஒன்றியம் நன்னியூரில் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :14 மே 2014, 11:00 am

கருத்துக்கணிப்புகளை எண்ணி தொண்டர்கள் அஞ்சி நடுங்கி மூலையில் முடங்கிப்போகமாட்டார்கள் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் நன்னியூர் ராஜேந்திரனின் தந்தையும், கரூர் வட்ட திமுக முன்னாள் செயலருமான என்.கே.காந்தியின் படத்திறப்பு நிகழ்ச்சி கரூர் ஒன்றியம் நன்னியூரில் புதன்கிழமை நடைபெற்றது. திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் என்.கே.காந்தி படத்தைத் திறந்து வைத்து அவருக்கு புகழஞ்சலி செலுத்தி பேசுகையில், யார் யாரோ இன்றைக்கு கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். இதில் அச்சுறுத்தலும், பயமுறுத்தலுமே தெரிகிறது. நாம்தான் வெற்றிப்பெறப்போகிறோம் என தெரிந்துக்கொண்டு நம்மை சோர்வடைய செய்வதற்காக இதனை செய்துள்ளனர்.

தேர்தல் விதிமுறைகளை மீறி பல்வேறு விஷயங்களை அரங்கேற்றியதுப்போல, வாக்கு எண்ணிக்கை நடைபெறும்போதும் அத்தகைய செயல்களை அரங்கேற்ற கருத்துக்கணிப்புகளை வெளியிட்டுள்ளனர். திமுக தொண்டர்கள் இதற்காக அஞ்சி, நடுங்கி மூலையில் முடங்கிப்போகமாட்டார்கள். நன்னியூர் காந்தி போன்றவர்கள் நம்மை அப்படி வளர்க்கவில்லை. உண்மை விரைவில் வெளிவரத்தான் போகிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.