கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் நன்னியூர் ராஜேந்திரனின் தந்தையும், கரூர் வட்ட திமுக முன்னாள் செயலருமான என்.கே.காந்தியின் படத்திறப்பு நிகழ்ச்சி கரூர் ஒன்றியம் நன்னியூரில் புதன்கிழமை நடைபெற்றது. திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் என்.கே.காந்தி படத்தைத் திறந்து வைத்து அவருக்கு புகழஞ்சலி செலுத்தி பேசுகையில், யார் யாரோ இன்றைக்கு கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். இதில் அச்சுறுத்தலும், பயமுறுத்தலுமே தெரிகிறது. நாம்தான் வெற்றிப்பெறப்போகிறோம் என தெரிந்துக்கொண்டு நம்மை சோர்வடைய செய்வதற்காக இதனை செய்துள்ளனர்.