2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

பிளஸ்டூ தேர்வில் தோல்வி அடைந்தோர் மறுதேர்வு எழுத வரும் 16-ம் தேதிக்குள் பெயர்களை பதிவு செய்ய வேண்டும்

பிளஸ்டூ தேர்வில் தோல்வி அடைந்த மாணவ, மாணவிகள் மீண்டும் துணைத் தேர்வு எழுதுவதற்கு வருகிற 16-ம் தேதிக்குள் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:15 am

எஸ். பாண்டியன்

பிளஸ்டூ தேர்வில் தோல்வி அடைந்த மாணவ, மாணவிகள் மீண்டும் துணைத் தேர்வு எழுதுவதற்கு வருகிற 16-ம் தேதிக்குள் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ்2 தேர்வில் பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களாக தேர்வு எழுதி தேர்ச்சி பெறாதோர், தேர்வு நடைபெற்ற நாளில் வருகை தராதோர் ஆகியோருக்கு சிறப்பு துணைத் தேர்வு எழுதுவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட இருக்கிறது. இத்தேர்வு வருகிற ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில் குறிப்பிட்ட நாளில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை பள்ளி கல்வித்துறை செய்து வருகிறது.

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புகிற மாணவ, மாணவிகள் படித்த பள்ளியின் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தேர்வு எழுதிய மையங்களுக்கும் நேரில் சென்று மே 12-ம் தேதி முதல், 16-ம் தேதிக்குள் ரூ.50 ரொக்கமாக செலுத்தி தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். இதற்காக தனி விண்ணப்பங்கள் எதுவும் வழங்கப்படாது.

துணைத் தேர்வுக்காக ஒவ்வொரு பாடத்திற்கும் தலா ரூ.50ம் மற்றும் இதர கட்டணங்களாக ரூ.35ம் அந்தந்த பள்ளிகளில் செலுத்த வேண்டும். இதையடுத்து தேர்வு விவரங்கள் மற்றும் நுழைவு சீட்டுக்களை பதிவு இறக்கம் செய்வது தொடர்பாக கல்வித்துறை மூலம் பின்னர் குறிப்பிட்ட நாளில் அறிவிக்கப்படும். எனவே தோல்வி அடைந்த மாணவ, மாணவிகள் துணைத் தேர்வு எழுதுவதற்கான இந்த வாய்ப்பை பயன்படுத்தி, தங்களின் தகுதியை உயர்த்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் கேட்டுக் கொண்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.