இது தொடர்பாக மாணவி கூறுகையில், நான் தொலைக்காட்சி பார்க்கமாட்டேன். டியூசனும் சென்றது இல்லை. இரவு நேரத்தில் ஆசிரியர்கள் கற்றுக் கொடுத்ததை அன்றைய நாளிலேயே அமைதியாக படித்து முடிப்பேன். ஆடை தயாரித்தல் பாடத்தில் ஆசிரியர் நன்றாக கற்றுக் கொடுத்ததால் தான் என்னால் அதிக மதிப்பெண் பெற முடிந்தது. எதிர்காலத்தில் கல்லூரியில் தமிழ் இலக்கியம் படித்து, ஆசிரியர் பயிற்சி பெற்று தமிழாசிரியராக ஆக வேண்டும் என்பதே லட்சியம் என்றார். இவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் விவரம்: தமிழ்-156, ஆங்கிலம்-104, ஆடை தயாரித்தலும், வடிவமைத்தலும்-185, மனை அறிவியல்-138, செய்முறை1-200, செய்முறை2-200 என மொத்தம் 1200க்கு 983 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.