விருதுநகர் மாவட்ட பகுதியில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. விருதுநகர் நகராட்சி பகுதியில் பழைய பேருந்து நிலையத்தை சுற்றிலும் உள்ள சாலை, சிவகாமியாபுரம் சாலை, தேசிய நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில் உள்ள கச்சேரி சாலை, 4 வழிச்சாலை பாலத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள விருதுநகர்-சிவகாசி சாலை, விருதுநகர்-அழாகபுரி சாலை, விருதுநகர் டி.டி.கே சாலை, மழையால் பல்வேறு இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டு குண்டும், குழியுமாக உள்ளது. சமீபத்தில் போடப்பட்ட சாலைகள் என்றாலும், ஒரு மழைக்கு தாங்காத நிலையில் சேதமடைந்து உள்ளது.