2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

திருவிழாவில் கேலி செய்த தகராறில் 2 பெண்களுக்கு அரிவாள் வெட்டு: 15 பேர் மீது வழக்கு பதிவு

விருதுநகர் அருகே திருவிழாவில் இளம்பெண்ணை கேலி செய்தது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் தாய், மகளுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இது தொடர்பாக இரண்டு கோஷ்டியினரும் கொடுத்த புகாரின் பேரில்

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:12 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே திருவிழாவில் இளம்பெண்ணை கேலி செய்தது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் தாய், மகளுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இது தொடர்பாக இரண்டு கோஷ்டியினரும் கொடுத்த புகாரின் பேரில் 15 பேர் மீது வச்சக்காரப்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர் அருகே உள்ளது ஆவுடையாபுரம் கிராமம். இங்கு மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவில் பங்கேற்பதற்காக சென்னையில் உள்ள போரூர் ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்த மாரிமுத்து குடும்பத்தினருடன் வந்திருந்தார். இந்நிலையில் செவ்வாய்கிழமை இரவு திருவிழாவை வேடிக்கை பார்ப்பதற்காக மாரிமுத்து, அவரது மனைவி முத்துமீனா(30), மகள் அனிதா(19) ஆகியோர் சென்றார்களாம்.

அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சங்கரலிங்கத்தின் மகன் ரவி(30) உள்ளிட்ட அவரது கோஷ்டியைச் சேர்ந்த 11 பேர் சேர்ந்து அனிதாவை கேலி கிண்டல் செய்தனராம். இதை மாரிமுத்து தட்டிக் கேட்டதை அடுத்து ஆத்திரம் அடைந்த ரவி கோஷ்டியினர், அரிவாள், கம்பு உள்ளிட்டவைகளால் தாக்கியுள்ளனர். இதில், அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதையடுத்து, தகவலை போலீஸாருக்கு தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதேபோல், ரவி கோஷ்டியைச் சேர்ந்த காயம் அடைந்த தவமணியை  சாத்தூர் அரசு மருத்துவமனைக்கும் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக வச்சக்காரப்பட்டி காவல் நிலையத்தில் முத்துமீனா கொடுத்த புகாரின் பேரில் ரவி, முத்துப்பாண்டி, துரைப்பாண்டி, கேசவன், ராமநாதன், பாலமுருகன், காளிராஜ், மாரிமுத்து, முனியாண்டி, பாண்டி உள்ளிட்ட 10 பேர் மீதும், ரவி கோஷ்டியைச் சேர்ந்த தவமணி கொடுத்த புகாரின் பேரில் மாரிமுத்து, சரவணா, ஹரி, சங்கர் மற்றும் ஜெய்சங்கர் ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்தும்  விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.